ராகுல் காந்தி கைது; வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

 

ராகுல் காந்தி கைது; வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி கைது; வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது முதுகெலும்பு மற்றும் நாக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

ராகுல் காந்தி கைது; வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

இதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் உயிரிழந்தார். இவ்வாறு உத்திர பிரதேசத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடருவதை கண்டித்து அங்கு போராட்டங்கள் வெடிக்கின்றன. அதன் காரணமாக, ஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்ல போலீசார் தடை விதித்திருக்கும் நிலையில், தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.

ராகுல் காந்தி கைது; வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் காங்கிரஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கைது செய்தனர்.