சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு!

 

சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு!

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு!

இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. தந்தை, மகன் உயிரிழந்த இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், 10 குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக சிபிசிஐடி பதிவு செய்தது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 காவலர்கள் மீது வழக்குபதிவு பதிவு செய்த நிலையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்டடார். இதையடுத்து எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்தூராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு!

இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி பேரூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்ட ரகு கணேஷை ஜூலை 16-இல் மீண்டும் ஆஜர்படுத்த முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹேமா உத்தரவிட்டுள்ளார்.