என்னை மன்னித்துவிடுங்கள் ரஜினி ரசிகர்களே! ராகவா லாரன்ஸின் உருக்கமான பதிவு

 

என்னை மன்னித்துவிடுங்கள் ரஜினி ரசிகர்களே! ராகவா லாரன்ஸின் உருக்கமான பதிவு

நடிகர் ரஜினி கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். தனது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று அறிவித்த ரஜினி, அதன் பிறகு மூன்று ஆண்டுகள் அமைதி காத்தார். இதையடுத்து மீண்டும் கடந்த மாதம் இறுதியில் தான் அரசியலுக்கு வர இருப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

ரஜினி அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும் அவர் பாஜகவின் அழுத்தத்தினால் மட்டும் தான் அரசியலுக்கு வர முனைப்பு காட்டுகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த சூழலில் உடல்நிலை சரியில்லாமல் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் ரஜினி தனது முடிவை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டுமென போராட்டமும் நடத்தினர்.

என்னை மன்னித்துவிடுங்கள் ரஜினி ரசிகர்களே! ராகவா லாரன்ஸின் உருக்கமான பதிவு

இந்நிலையில் ரஜினியின் கட்சியில் இணைவேன் அவர் தான் என் குரு என சொல்லிவந்த நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை பதிவிட்டுள்ளார். அதில், “நிறைய பேர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டுமெனக் கோரி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் என்னையும் கலந்துகொள்ளும்படி வற்புறுத்தினர். தனது முடிவை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டுமென ரஜினியிடம் பேசுமாறு வலியுறுத்தினர். அதற்காகவே இந்த அறிக்கையை தற்போது வெளியிடுகிறேன். ரஜினியின் முடிவால் ரசிகர்களாகிய உங்களுக்கு இருப்பது போன்ற வலி எனக்கும் இருக்கிறது. தலைவர் வேறு ஏதாவது காரணம் சொல்லியிருந்தால் நாம் அவரிடம் முடிவை மாற்றும்படி கோரியிருக்கலாம்.

Image

ஆனால் அவர் முக்கிய காரணமாக அவரது உடல்நிலையை குறிப்பிட்டுள்ளார். இதையும் மீறி நாம் அவரை அரசியலுக்கு அழைத்து ஏதாவது நடக்கக்கூடாத விபரீதம் நடந்துவிட்டால் நாம் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் ஒருவித உருத்தல் ஏற்பட்டுவிடும். ரஜினி எப்பவுமே என்னுடைய குரு. அவருடைய உடல்நிலை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் மிகவும் நெருக்கமாக அதை பற்றி அவரிடம் பேசியுள்ளேன். தற்போது அவர் நலமடைய வேண்டும், நீடுழி வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே கடவுளை பிரார்த்திக்க வேண்டும். குருவே சரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.