ரஜினியால் பாஜக வளர்ச்சியடைவில்லை- நடிகர் ராதாரவி

 

ரஜினியால் பாஜக வளர்ச்சியடைவில்லை- நடிகர் ராதாரவி

நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி, “ரஜினியால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடையவில்லை, தானாகவே வளர்ச்சியடைந்தது.ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பிரச்னை இல்லாத கட்சி, நல்ல கட்சி என்பதால் நடிகர்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இருக்குமா இல்லையா என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்.

ரஜினியால் பாஜக வளர்ச்சியடைவில்லை- நடிகர் ராதாரவி

திமுக தலைவர் ஸ்டாலின் தற்போதுதான் முதல்முறையாக தேர்தலை சந்திக்கிறார். அதனால் கிராம சபை கூட்டங்களையெல்லாம் போட்டு மக்களை கவர்ந்துவருகிறார். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்துவத இயல்புதான்.தேர்தலின் போது தான் தலைவர்கள் மக்களை சந்திப்பது என்பது தமிழகத்தின் தலையெழுத்து. ஸ்டாலின் பேசுவது அவரது தந்தை கருணாநிதி போல் இல்லை.

இரட்டை இலை சின்னத்தை அழிக்க இன்னும் 50 ஆண்டு காலாமாவது ஆகும். ஆனால், அதற்கு தலைமை நன்றாக இருக்க வேண்டும். பாஜகவுக்கு சிறந்த தலைமை மோடி. தமிழகத்தில் பாஜக புரட்சி செய்துவருகிறது. திமுகவை இருக்குமிடம் தெரியாமல் ஆக்கிவிட்டது அதிமுக” எனக் கூறினார்.