‘நாளை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!

 

‘நாளை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழகம் முழுவதும் நாளை மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாகவும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

‘நாளை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!

இந்த நிலையில் தடுப்பூசி முகாம்கள் குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம்கள் செயல்படும். 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தேவைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.