பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? ராதாகிருஷ்ணன் பதில்

 

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? ராதாகிருஷ்ணன் பதில்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் மேலும் 4 லட்சம் இன்று சென்னை வந்து, அதை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டு சேமிப்பு கிடங்கில் ஆய்வை மேற்கொண்டார்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? ராதாகிருஷ்ணன் பதில்

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, “தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிகள் தேவைக்கு ஏற்ப மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு கேட்டுப் பெறுகிறது.

தமிழகத்தில் இதுவரை 2.08 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. தற்போது 11.36 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. முன்பைவிட தற்போது மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது.

தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி தேவையான அளவு தற்போது உள்ளதால், பற்றாக்குறை இல்லை. தமிழகத்தில் கல்லூரிகள், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்” எனக் கூறினார்.