தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இலவசமாகவே போடப்படும்- ராதாகிருஷ்ணனர

 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இலவசமாகவே போடப்படும்- ராதாகிருஷ்ணனர

நாளை மறுநாள் 16ஆம் தேதி கோவிட் தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “கோவிட் தடுப்பூசி முதல்முறையாக செலுத்தும் நிறுவனத்தின் ஊசியை தான் மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு இலவசமாக போடப்படும் என தமிழக முதல்வரின் கொள்கை சார்ந்த முடிவை கடைப்பிடிப்போம். தடுப்பூசி போடும் பணிதான் துவங்கி விட்டது, தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களும் உடனே முகக்கவசம் அணியாமல் இருப்பது தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் தவறு. இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் வரை முதல் முறை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர் முறையான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இலவசமாகவே போடப்படும்- ராதாகிருஷ்ணனர

கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்கிறது. ஆனால் தொடர்ந்து பொதுமக்கள் முககவசம் அவது,தனிமனித இடைவெளி கடைபிடிக்ககாத நிலை உள்ளது. மற்ற நாடுகளில் மீண்டும் கோவிட் அலை வீசுவது பொதுமக்களின் அலட்சியதால் தான். முன்கள பணியாளர்களில் தன்விருப்பம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். பொதுமக்களுக்கான தடுப்பூசி எப்போது என மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி போடப்படும்” என தெரிவித்தார்.