எந்த அரசும் தன் மக்களை கொல்ல மருந்து தராது- ராதாகிருஷ்ணன்

 

எந்த அரசும் தன் மக்களை கொல்ல மருந்து தராது- ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், மருத்துவமனை வாசலில் மன்சூர் அலிகான் சத்தம் போடும் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதில் நடிகர் விவேக் கோவிட் தடுப்பூசி போட்டதாலேயே தான் விவேக் உடல் நிலை பாதித்ததாகவும், கொரானா டெஸ்ட் எல்லாம் நிறுத்துங்கள் என பத்திரிக்கையாளர் முன்னாடி சத்தம் போட்டார். இதற்காக
மன்சூல் அலிகானை நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவர் விவேக் மீது உள்ள பாசத்தில், வரும் இந்த கோபம் இயல்பானது என்று எடுத்துக் கொள்வோம்.

எந்த அரசும் தன் மக்களை கொல்ல மருந்து தராது- ராதாகிருஷ்ணன்

விவேக் ஊசி போட்டதால் தான் பாதிக்கப்பட்டாரா ?. கோவிட் ரெஸ்பிரிரேட்டரி, அதாவது சுவாசப் பாதை தொற்று. அதற்கும் ஹார்ட் அட்டாக்கும் சம்பந்தமில்லை.
ஹார்ட் அட்டாக் வர நம் இதயத்துக்கு ரத்தம் போகும் அல்லது வரும் பாதைகளில் ஏற்படும் அடைப்புதான் காரணம். அந்த அடைப்பு ஒரே நாளில் வராது.

கார்டியாக் பிரச்சனை உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்கலாம். அல்லது மருத்துவர் ஆலோசனை படி நடக்கலாம். ஆனா தடுப்பூசியால் கார்டியாக் வர வாய்ப்பு எதும் இல்லை.

அதுவும் முதல் நாள் ஊசிபோட்ட உடனே அப்படி இதய பிரச்னை ஏற்பட 99% வாய்ப்பில்லை. அதனால் இது தடுப்பூசியால் நடந்தது இல்லை. ஆனால் இதுதொடர்பான சந்தோஷத்துக்கு மருத்துவமனை நிர்வாகமும், அரசும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் .

கோவிட் சிச்சுவேஷன் ரொம்ப மோசமா இருக்கு. மருத்துவர்களுக்கும் , அரசு நிர்வாகத்திற்கும் கடும் வேலை. இதற்கு இடையில் தினம் ப்ரஸ் மீட் வைத்து விளக்கம் தர வேண்டிய சூழலை அவர்களுக்கு உருவாக்கக் கூடாது. ஏற்கனவே பணிச் சுமையில் வாடுகின்றவர்களுக்கு மேலும் பணிச்சுமை தரக்கூடாது. மருத்துவர்களும் மனிதர்கள் தான். அவர்கள் அரசின் விதிகளுக்கு கட்டுபட்டே ஆக வேண்டும். அதை மீறி எதுவும் செய்ய இயலாது. கோவிட்டில் நாம் பல மருத்துவர்களை அதுவும் இளம் மருத்துவர்களை பலிகொடுத்து உள்ளோம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு சமூகம் பதட்டத்தில் இருக்கும் போது அதை மேலும் பதட்டமடைய செய்வது சரி இல்லை. தயவுசெய்து மக்கள் அமைதியா இருங்கவும். கண்ட கண்ட பார்வர்ட் மெஸேஜ்களை அனுப்பி மக்களை உளவியல் ரீதியாக பாதிக்க வைக்காதீர்கள்.

தயவு செய்து அமைதியாக இருங்க.
அரசு நிர்வாகம் என்பது தன்னிச்சையாக மட்டும் முடிவெடுக்க இயலாது. மத்திய அரசு , WHO , ஐ நா சபைன்னு பல கண்காணிப்பு உள்ளது. நான் என் ஸ்டேட்ல கொரானா டெஸ்ட் நிறுத்திக்கொள்கிறேன் என நாம் தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது. இந்தியாவே எடுக்க இயலாது. உலக நாடுகளுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். கண்ணுக்கு முன் கோடிக்கணக்கான உயிர் போய் கொண்டே இருக்கும் போது அப்படி ஒரு நோயே இல்லைனு சொல்ல முடியாது. எந்த அரசும் தன் மக்களை கொல்ல மருந்து தராது..தரவும் முடியாது. அப்படி தந்தாலும் சர்வதேச சமூகம் கேள்வி கேட்கும் . அதனால் தயவுசெய்து மற்றவரை பேனிக் செய்யாமல் அமைதியா இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.