“எலிகளுக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது”- அதிமுக அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

 

“எலிகளுக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது”- அதிமுக அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றவர்களின் கருத்துக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“எலிகளுக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது”- அதிமுக அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை தான் மு.க ஸ்டாலின் நம்பியிருக்கிறார் என கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த மு.க ஸ்டாலின், ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ராஜேந்திர பாலாஜி தான் உதாரணம் என தெரிவித்தார்.

“எலிகளுக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது”- அதிமுக அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு பதில் அளித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, மு.க ஸ்டாலின் இமயமலைக்கு சமமாக அரசியல் செய்கிறார். அவரை பார்த்து நாய் குரைப்பதாகவே கருதுகிறோம். தெருவோர நாய்களுக்கு பதில் சொல்லி எங்களுக்கு பழக்கம் இல்லை. அவரை பற்றி விமர்சிக்கும் தகுதி யாருக்கும் கிடையாது என கூறினார். மேலும், பொறுப்பு உள்ளவர்களுக்கு மட்டும் தான் பதில் சொல்ல முடியும் என்றும் புலி வேட்டைக்கு செல்லும் நாங்கள் எலிகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அவர் பதிலடி கொடுத்தார்.