‘பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?’ தமிழக முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

 

‘பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?’ தமிழக முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துவருகிறது. அதனால், சில மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது. இதனால், காவல் துறையினருக்கு பணி சுமை கூடுகிறது. பல காவலர்கள் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வரும் சூழல்.

‘பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?’ தமிழக முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சாத்தான்குளத்தில் மரணம் அடைந்த ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார். அவர் சென்னை திரும்பும் வழியில், முதல்வரின் வருகையை ஒட்டி பந்தோபஸ்துக்கு நிற்கும் காவலர்களைப் பார்த்திருக்கிறார். அதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டில், ” சாத்தான்குளத்திலிருந்து மதுரை வழியாக சென்னை வந்துகொண்டிருந்தோம். சேலம் சாலையிலிருந்து சென்னைவரை சுமார் 250 கி.மீட்டருக்கும் மேல் இருபது அடிக்கு ஒருவரென கொளுத்தும் வெயிலில் ஆண், பெண் காவலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். ஊரடங்கு பணியோ என நினைத்தபடி காவலர்களிடம் விசாரித்தேன்.

 

 

‘சேலம் டு சென்னை செல்லும் @CMOTamilNadu அவர்களுக்கான பந்தோபஸ்து’ என்றனர். முதல்வருக்கு பாதுகாப்பு அவசியமே. ஆனால் ஊரடங்கில் அனைவரும் வீடடங்கியுள்ள சூழலில் முதல்வரை யாரிடமிருந்து பாதுகாக்க இந்த பந்தோபஸ்து? காவலர்கள் சுழற்சிமுறையில் பணிசெய்யும் பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?

 

சமீபகாலமாக அதிகரித்து வரும் போலீசாரின் வன்முறைக்கு இதுபோன்ற பணிச்சூழலும் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. காவலர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் வகையில் மணிக்கணக்கில் வேலையின்றி ஒரேயிடத்தில் நிற்கவைக்கப்படுவதை முதல்வர் அவர்கள் தவிர்க்கலாமே! ‘

 

 

என்று குறிப்பிட்டுள்ளார்.