இன்று முதல் 1- 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை! பள்ளியே திறக்கல அதுக்குள்ள!!

 

இன்று முதல் 1- 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை! பள்ளியே திறக்கல அதுக்குள்ள!!

1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது. ஆனால் ஆன்லைன் வகுப்பை மாணவர்கள் வீட்டிலிருந்தே படிப்பதால் காலாண்டு விடுமுறைகள் வழங்கப்படுமா என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பமாகவே இருந்தது.

இன்று முதல் 1- 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை! பள்ளியே திறக்கல அதுக்குள்ள!!

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விரும்பினால் மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு சென்று சந்தேகங்களையும் பாடங்களையும் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.