கியூ பிரிவு போலீசார் அதிரடி! இலங்கை தமிழர் முகாமில் தங்கியிருந்த இளம்பெண் கைது

 

கியூ பிரிவு போலீசார் அதிரடி!  இலங்கை தமிழர் முகாமில் தங்கியிருந்த  இளம்பெண் கைது

கியூ பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம், இலங்கை தமிழர் முகாமில் அவ்வபோது சென்று சோதனை செய்வது வழக்கம். இதைப்போல் சந்தேகப்படும் நபர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தும் வருகின்றனர்.

கியூ பிரிவு போலீசார் அதிரடி!  இலங்கை தமிழர் முகாமில் தங்கியிருந்த  இளம்பெண் கைது

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இலங்கை தமிழர் முகாமில் சென்று சோதனை செய்தபோது ஒரு சிலர் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒரு இளம் பெண் பாஸ்போர்ட் வைத்திருந்த தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து ஈரோடு மாவட்ட கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதில் அந்த இலங்கை தமிழர் முகாமில் தங்கியிருந்த பிரதீபா (வயது 36) என்ற இளம்பெண்ணின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அப்போது அவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது. போலி அடையாள அட்டை, போலி ரசீது வைத்திருந்ததும் தெரியவந்தது. பிரதீபா 1990 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தமிழர் முகாமில் தங்கி இருந்தது தெரியவந்தது.

கியூ பிரிவு போலீசார் அதிரடி!  இலங்கை தமிழர் முகாமில் தங்கியிருந்த  இளம்பெண் கைது

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.