கழிவறையில் இளைஞரின் மர்ம உறுப்பை ‘பதம்’ பார்த்த பாம்பு- தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்!

 

கழிவறையில் இளைஞரின் மர்ம உறுப்பை ‘பதம்’ பார்த்த பாம்பு- தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்!

கழிவறையில் இளைஞர் ஒருவரின் மர்ம உறுப்பை பாம்பு ஒன்று பதம் பார்த்த பரபரப்பு சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் நோந்தான்புரி பகுதியில் வசித்து வருபவர் சிரப்ஷாப் மசுகரத். கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள பாத்ரூமில், காலைக்கடன் கழிக்க சென்றுள்ளார். அப்போது தனது மர்ம உறுப்பில் ஏற்பட்ட திடீர் வலி காரணமாக அலறி துடித்துள்ளார். பின்னர் பார்த்தபோது, பைதான் இனத்தை சேர்ந்த பாம்பு ஒன்று, கழிவறை தொட்டிக்குள் இருந்தபடி.தனது மர்ம உறுப்பை கடித்தபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கழிவறையில் இளைஞரின் மர்ம உறுப்பை ‘பதம்’ பார்த்த பாம்பு- தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்!


இதையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து ஓட்டம் பிடித்த அவரை, அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
-S. முத்துகுமார்