அறை மாற்றத்தை கண்டித்து, புழல் சிறை கைதி தொடர் உண்ணாவிரதம்

 

அறை மாற்றத்தை கண்டித்து, புழல் சிறை கைதி தொடர் உண்ணாவிரதம்

சென்னை

புழல் சிறையில் தங்கியிருந்த அறையை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர், சுந்தரமூர்த்தி. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் கைதியாக இருந்து உள்ளார்.

அறை மாற்றத்தை கண்டித்து, புழல் சிறை கைதி தொடர் உண்ணாவிரதம்

இந்த நிலையில், சமீபத்தில் சிறை அதிகாரிகள் இவர் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்த அறையில் இருந்து, வேறு அறைக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சுந்தரமூர்த்தி, தன்னை மீண்டும் பழைய அறைக்கே மாற்ற வலியுறுத்தி, தனது அறையில் கடந்த 2 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் புழல் சிறை வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.