‘மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்’ : சீமான் வேண்டுகோள்!!

 

‘மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்’ : சீமான் வேண்டுகோள்!!

அனைவரும் வீட்டு மாடிகளில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரொனா தொற்று மீண்டும் தீவிரமடைந்திருக்கும் இந்நேரத்தில் உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியமானது. முகக்கவசம், கையுறை பயன்படுத்துவதோடு, தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்குமாறும், நோய்எதிர்ப்பு ஆற்றலுக்காக கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

‘மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்’ : சீமான் வேண்டுகோள்!!

தற்பொழுது கடும் வெயிற்காலமாக இருப்பதால் அனைவரும் மிகக் கவனமாகவும், வீட்டிலுள்ள முதியோர்களை அதீத கவனம் கொண்டு பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது போல பிற உயிரினங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும், ஆதலால் உறவுகள் அனைவரும் தங்கள் வீடுகளின் முகப்பில் அல்லது மாடியில் பறவைகளுக்கும், பிற சிற்றுயிர்களுக்கும் தண்ணீர்த்தொட்டி அமைத்து உயிர்நேயம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ‘உங்கள் அனைவரின் பேராதரவும் காலத்தில் நீங்கள் செலுத்திய கடின உழைப்பும் கொண்டு நாம் தமிழர் கட்சியை தேர்தலை சந்தித்து இருக்கிறது. நம் அனைவரின் ஒற்றுமைக்கும், உழைப்புக்கும் உறுதி பாட்டுக்கும் உரிய வெற்றியினை காலம் நமக்கு கட்டாயமாக கையளிக்கும். முன்னெப்பொழுதையும் விட மக்களின் ஆதரவு நமக்கு அதிகமாக கிடைத்திருக்கும் இந்த வேளையில் இனிவரும் நாட்கள் நமக்கு மிக முக்கிய காலகட்டம் என்பதை உணர்ந்து களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் மிக கவனமாக பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்று நினைவூட்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்