நாளை காலை உருவாகிறது ‘புரெவி’ புயல் !
Dec 1, 2020, 13:56 IST1606811165000
நாளை காலை புதிய புயல் உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை
அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டிசம்பர் 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.