புரட்டாசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

 

புரட்டாசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி

புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமை என்பதால், இன்று, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் பக்தர்களால் போற்றப்படுகிறது ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

பக்தர்கள் வருகையை குறைக்க கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இலவச தரிசனத்திற்கு ஆன்லைனில் புக் செய்யவேண்டும் என கோயில் நிர்வாகம் கூறி இருந்தது. இந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் புக் செய்து கோயிலுக்கு வருகை தந்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

ஆன்லைனில் புக் செய்யாத பலரும் சாமி தரிசனம் செய்ய வந்ததால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

புரட்டாசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்