புரட்டாசி 2வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

 

புரட்டாசி 2வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம். அதன்படி, இன்று புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதற்கொண்டே அலைமோதியது.

புரட்டாசி 2வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி 2வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஈரோடு-பவானி செல்லும் ரோட்டில் மாயபுரத்தில் உள்ள பெருமாள்மலையில் புரட்டாசி சனிக்கிழைமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடந்தது. இதில், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனர். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலிலும் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மூலவரை வழிபட்டு சென்றனர்.

புரட்டாசி 2வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி 2வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள பெருமாள் கோயில், அம்மாபேட்டை சித்தேஸ்வரன் மலை கோயில், பவானி கூடுதுறையில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோயில், கவுந்தப்பாடி வரதராஜபெருமாள் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு சென்றனர்.

புரட்டாசி 2வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்