பஞ்சாப் டீம் முதலில் பேட்டிங்

 

பஞ்சாப் டீம் முதலில் பேட்டிங்

ஐபிஎல் திருவிழாவில் பிளே ஆஃப் சுற்றை நோக்கி ஒவ்வோர் அணியும் கடும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஆடி வருகிறார்கள். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

12 போட்டிகளில் 6 –ல் வென்று 12 புள்ளிகளோடு பஞ்சாப் பாயிண்ட் டேபிளில் 4 இடத்தில் உள்ளது. 12 போட்டிகலில் 5-ல் வென்று 10 புள்ளிகளோடு 7-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற பஞ்சாப் அணிக்கே அதிக வாய்ப்பிருக்கிறது.

பஞ்சாப் டீம் முதலில் பேட்டிங்

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வெல்லும்பட்சத்தில் 12 புள்ளிகளோடு மேலே செல்லும். மிக அதிக ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் வெல்லும்பட்சத்தில் 4 இடத்திற்குக்கூடச் செல்ல முடியும். அதனால் இன்றைய போட்டி பஞ்சாப்பை விடவும் அதிக முக்கியத்துவம் ராஜஸ்தான் அணிக்கு.

பஞ்சாப் டீம் முதலில் பேட்டிங்

பஞ்சாப் டீமில் சமீப போட்டிகளில் கிறிஸ் கெயில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்றும் அவரது அதிரடி இருக்கும் என்றே நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ராஜஸ்தானிலும் சஞ்சு சாம்ஸன், ராகுல் திவட்டியா போன்றோர் காத்திருக்கிறார்கள். அதனால், நிச்சயம் இன்றைய போட்டியில் ரன் மழை பெய்யும்.

இன்று டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன்  முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். அதனால் முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீம் வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறார்கள்.