‘ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற’ ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் அரசு!

 

‘ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற’ ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் அரசு!

இந்திய ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அணியில் இடம்பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுமென பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்திய ஹாக்கி அணி ஜெர்மனி அணியை எதிர்த்து களமிறங்கியது. போட்டி தொடங்கிய இரண்டே நிமிடங்களில் ஜெர்மனி அணி முதல் கோல் அடித்து அரங்கத்தையே அதிர வைத்தது. எனினும், விடா முயற்சியோடு விளையாடிய இந்திய அணி 5 -4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

‘ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற’ ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் அரசு!

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 1980ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் பெறவே இல்லை. சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கத்தை தன்வசப்படுத்தியது இந்தியர்களுக்கு பேரின்பம் அளித்தது. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வெற்றியை இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களிடம் இருந்த ஹாக்கி அணிக்கு வாழ்த்து மழை பொழிகிறது.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷெர் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.