கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தூதரானார் சோனு சூட்!

 

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தூதரானார் சோனு சூட்!

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் முதல் ஊடுருவிய கொரோனா தற்போது வரை விட்டு விலகவில்லை. கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின. ஆனால் அதற்குள் கொரோனாவின் இரண்டாம் அலை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிவிட்டது. ஒருபுறம் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடந்தாலும், மறுபுறம் கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தூதரானார் சோனு சூட்!

இதனிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் பஞ்சாபில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இயக்கத்தின் தூதராக நடிகர் சோனு சூட்டை நியமித்து அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்