“பெண்ணை விரட்டினார் ,கண்ணை குருடாக்கினார்”-பலாத்கார முயற்சியில் பெண்ணுக்கு நேர்ந்த நிலை..

 

“பெண்ணை விரட்டினார் ,கண்ணை குருடாக்கினார்”-பலாத்கார முயற்சியில் பெண்ணுக்கு நேர்ந்த நிலை..

ஒரு இருட்டான பகுதியில் இயற்கை உபாதை கழிக்க போன ஒரு பெண்ணை, ஒரு வாலிபர் அவரின் கண்ணை குருடாக்கிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஷிரூர் தெஹ்ஸில் நவ்ஹரே கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு 37 வயது பெண் இயற்கை உபாதையை கழிக்க சென்றார் .அப்போது ஒரு வாலிபர் அந்த பெண்ணை அந்த இருட்டான பகுதியில் விரட்டி சென்றார் .அதன் பிறகு அந்த இருட்டில் அந்த வாலிபர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார் .ஆனால் அந்த பெண் அதை கடுமையாக எதிர்த்து அவரை தாக்க தொடங்கினார் .
அதனால் அந்த வாலிபரால் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முடியவில்லை .அதனால் அந்த வாலிபர் அந்த பெண் தன்னை ஊரார் முன்பு காட்டி கொடுத்து விடுவார் என்று பயந்துள்ளார் .அதனால் அந்த வாலிபர் அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார் .அதனால் அந்த பெண் அங்கேயே கீழே சாய்ந்துளார் .உடனே அந்த வாலிபர் அந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் இரண்டு கண்களையும் சேதப்படுத்தினார் .இதன் காரணமாக அந்த பெண்ணின் இரண்டு கண்களும் குருடாகிவிட்டன .உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் ,.உடனே அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .இருந்தாலும் அவருக்கு கண் பார்வை கொடுக்க டாக்டர்கள் போராடி வருகிறார்கள் .இந்த கொடூர தாக்குதலை பல அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை தேடி வருகிறார்கள்

“பெண்ணை விரட்டினார் ,கண்ணை குருடாக்கினார்”-பலாத்கார முயற்சியில் பெண்ணுக்கு நேர்ந்த நிலை..