“என் காதலியை கொன்னுட்டேன் ,நேரா இங்க வந்துட்டேன்” -பிணத்தை பார்க்க போலீசை அழைத்த வாலிபர்.

 

“என் காதலியை கொன்னுட்டேன் ,நேரா இங்க வந்துட்டேன்” -பிணத்தை பார்க்க போலீசை அழைத்த வாலிபர்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு 27 வயது வாலிபர் காவல் நிலையத்திற்கு வந்தார் .அங்கு வந்த அவர் அங்கிருந்த போலீசாரிடம் ஒரு பேப்பரையும் பேனாவையும் கேட்டார் .அவர் கேட்டதும் போலீசார் பேப்பரை கொடுத்தனர் .அதை வாங்கிய அந்த வாலிபர் , அந்த பேப்பரில் தான் மனநலம் பாதித்தவர் என்றும் ,தன்னுடைய கர்ப்பிணி காதலியை கொலை செய்து விட்டதாகவும் ,அவரின் பிணம் வீட்டு வாசலில் இருப்பதாகவும், உடனே வந்து அதை பார்த்து நடவடிக்கை எடுங்கள் என்று எழுதியிருந்தார் .


அதை வாங்கி படித்து பார்த்த போலிஸாருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது .பிறகு அவரின் பேச்சை நம்பி அவரின் வீட்டுக்கு போலீசார் சென்றனர் .அங்கு அவரின் வீட்டில் அந்த நபர் , அவரின் காதலியை கொலை செய்து விட்டு பிணத்தை கிடத்தியிருந்த காட்சியை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தார்கள் .பிறகு போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .
பிறகு அந்த வாலிபரை கைது செய்து, போலீசார் அவரிடம் விசாரித்த போது ,தாங்களிருவரும் கல்யாணம் பண்ணிக்காமல் ஒரு வருடமாக வாழ்ந்து வருவதாகவும் ,இந்நிலையில் தன்னுடைய காதலி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ,தங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்ததால் அந்த சண்டையில் தான் அவரை கொலை செய்து விட்டதாக அவர் கூறினார் .போலிஸார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

“என் காதலியை கொன்னுட்டேன் ,நேரா இங்க வந்துட்டேன்” -பிணத்தை பார்க்க போலீசை அழைத்த வாலிபர்.
FIR (Photo: IANS)