“ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில்” : தமிழக அரசு அறிவிப்பு!

 

“ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில்” : தமிழக அரசு அறிவிப்பு!

டிசம்பர் வரை ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில்” : தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையில் முழு நிதி நிலை அறிக்கை திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி வேளாண் துறைக்கான தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி முதல் கூட்டத்தொடரில் துறைவாரியான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசி வருகின்றனர்.

“ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில்” : தமிழக அரசு அறிவிப்பு!

இந்நிலையில் ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் டிசம்பர் வரை தரப்படும் என சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்படும் என்றும் இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாதம் ஒன்றுக்கு 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையி்ல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி போது இதை தெரிவித்ததுடன், மக்கள் எளிதில் சென்று வரமுடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் நியாய விலைக்கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றும் மே மாதம் முதல் தற்போது வரை 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கவுரை அளித்தார்.