புஜாராவின் ஆசையை நிறைவேற்றிய சிஎஸ்கே.. 7 வருடங்களுக்கு பின் ஐபிஎல்லில் ரிஎன்ட்ரி!

 

புஜாராவின் ஆசையை நிறைவேற்றிய சிஎஸ்கே.. 7 வருடங்களுக்கு பின் ஐபிஎல்லில் ரிஎன்ட்ரி!

புஜாரா என்றாலே டெஸ்ட் போட்டிக்குத் தான் சரிப்பட்டு வருவார் என்ற பிம்பம் நீண்ட நாளாகவே கட்டமைக்கப்பட்டுவருகிறது. இந்திய அணியிலும் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், அவர் அனைத்துத் தொடர்களிலும் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவர் ஆசையை 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே நிறைவேற்றி வைத்துள்ளது.

புஜாராவின் ஆசையை நிறைவேற்றிய சிஎஸ்கே.. 7 வருடங்களுக்கு பின் ஐபிஎல்லில் ரிஎன்ட்ரி!

கடைசியாக 2014ஆம் ஆண்டு புஜாரா பஞ்சாப் அணிக்காக விளையாடியிருந்தார். மொத்தமாக 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 390 எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 20.53. ஸ்டிரேக் ரேட் 99.74. அவருக்கு முட்டியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவரால் சரியாக ஓட முடியாது.

புஜாராவின் ஆசையை நிறைவேற்றிய சிஎஸ்கே.. 7 வருடங்களுக்கு பின் ஐபிஎல்லில் ரிஎன்ட்ரி!

ஐபிஎல் என்றாலே அதிரடி தான் என்பதால் இதனைக் காரணம் காட்டியே ஒரு சிறந்த வீரரை அணிகள் ஓரங்கட்டிவந்தன. அவரும் விடாமல் ஒவ்வொரு ஏலத்திலும் தன்னுடைய பெயரைப் பதிவுசெய்து வந்தார். இறுதியில் இந்தாண்டுக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி அவரை ரூ.50 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.