‘ஆயுத பூஜை சிறப்பு சந்தை இந்த ஆண்டு நடைபெறாது’ – கோயம்பேடு சந்தை நிர்வாகம்

 

‘ஆயுத பூஜை சிறப்பு சந்தை இந்த ஆண்டு நடைபெறாது’ – கோயம்பேடு சந்தை நிர்வாகம்

இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்பு சந்தை நடைபெறாது என கோயம்பேடு சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது.

‘ஆயுத பூஜை சிறப்பு சந்தை இந்த ஆண்டு நடைபெறாது’ – கோயம்பேடு சந்தை நிர்வாகம்

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில், கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்படுவது வழக்கம். அப்போது, மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மலிவான விலையில் வாங்கிச் செல்வர். அந்த வகையில் ஆயுத பூஜைக்கும் பொரி, கடலை,மஞ்சள் கொத்து உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் விற்க சிறப்பு சந்தை அமைக்கப்படும்.

‘ஆயுத பூஜை சிறப்பு சந்தை இந்த ஆண்டு நடைபெறாது’ – கோயம்பேடு சந்தை நிர்வாகம்

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் சிறப்பு சந்தை அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த அதிகாரி, “கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டே கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. தற்போது மார்க்கெட் திறந்திருந்தாலும் 2000 கடைகளில் 200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்பு சந்தை அமைக்கப்படாது” என தெரிவித்துள்ளார். முன்னதாக விநாயகர் சதுர்த்தியின் போதும், சிறப்பு சந்தை அமைக்க கோயம்பேடு சந்தை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.