ஜெயலலிதா டெல்லிவரை சென்று மோடியோடு உறவு கொண்டாட சொன்னாரா? புகழேந்தி கேள்வி

 

ஜெயலலிதா டெல்லிவரை சென்று மோடியோடு உறவு கொண்டாட சொன்னாரா? புகழேந்தி கேள்வி

பாமக குறித்து அவதூறாக பேசியதற்காக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு பிரச்னையை கிளப்பியிருக்கிறார். ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவதற்காக தங்கதமிழ் செல்வனை ராஜினாமா செய்ய சொன்னார்கள், ஆனால் அவர் ராஜினாமா செய்ய மறுத்ததால் விடிய விடிய அவரிடம் பேசிய அவரை ராஜினாமா செய்ய வைத்தேன் என ஓபிஎஸ் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா சொல்லியும் ராஜினாமா செய்யவில்லை என்றால் எனது நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துபார்க்க வேண்டுமென தங்கதமிழ் செல்வன் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா டெல்லிவரை சென்று மோடியோடு உறவு கொண்டாட சொன்னாரா? புகழேந்தி கேள்வி

ஓபிஎஸ்க்கு ஒரு கேள்வி கேட்கிறேன். பாஜகவுடன் என்றைக்குமே கூட்டணி வைக்க மாட்டேன் என ஜெயலலிதா ஆணையீட்டார்களே அதனை எப்படி மறந்தீர்கள்? அவர்களுடன் எப்படி கூட்டணி வைத்துக்கொண்டீர்கள், உதிரி கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது, கொள்கையற்ற கூட்டணி என ஜெயலலிதா பிரச்சாரத்தில் கூறினார். அதனை எப்படி மறந்தீர்கள்? இந்த நாட்டின் பிரதமர் தமிழகத்தை சேர்ந்த லேடியா அல்லது குஜராத்தை சேர்ந்த மோடியா? என கேள்வி எழுப்பிய ஜெயலலிதாவின் வார்த்தையை எப்படி மீறினீர்கள். ஜெயலலிதாவின் ஆணையை மீறி டெல்லி வரை சென்று இணக்கமான உறவை ஏற்படுத்தியது ஜெயலலிதாவின் ஆணையா? ஜெயலலிதாவின் ஆணையை மீறி ஏன் பாஜகவுடன் கூட்டணி வைத்தீர்கள்.
?” என கேள்வி எழுப்பியுள்ளார்.