தாமிரபரணி ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி!

 

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது முபாரிஸ் (28). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த மே மாதம் சேதுக்கு வாய்த்தான் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், பக்ரீத் பண்டிகைக்காக முகமது முபாரிஸ், தனது மனைவியுடன் சேதுக்குவாய்த்தானில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி!

தொடர்ந்து, நேற்று உறவினர்களுடன் அங்குள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளித்து உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற முகமது முபாரிஸ், தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு, அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது, மயங்கிய நிலையில் கிடந்த முகமது முபாரிஸை அவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முகமது முபாரிசின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.