பட்டா மாறுதலுக்கு ரூ.11,000 லஞ்சம் பெற்ற விஏஓ சஸ்பெண்ட்

 

பட்டா மாறுதலுக்கு ரூ.11,000 லஞ்சம் பெற்ற விஏஓ சஸ்பெண்ட்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே பாட்டா மாறுதலுக்கு ரூ.11 ஆயிரம் லஞ்சம் பெற்ற கைதான கிராம நிர்வாக அலுவலர், அதிரடியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுகோட்டை மாவட்டம் குடுமியான்மலை பகுதியை சேர்ந்த துரையரசன்

பட்டா மாறுதலுக்கு ரூ.11,000 லஞ்சம் பெற்ற விஏஓ சஸ்பெண்ட்

என்பவர் பட்டா மாறுதல் செய்ய, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், பட்டா மாறுதல் செய்ய 11 ஆயிரம் லஞ்சம் வழங்குமாறு மணிகண்டன் கேட்டுள்ளார். இதுகுறித்து, துரையரசன் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, வி.ஏ.ஓ மணிகண்டன் இன்று லஞ்ச பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து, விஏஓ மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து இலுப்பூர் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.