புதுக்கோட்டையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 825 ஆக அதிகரிப்பு!

 

புதுக்கோட்டையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 825 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,496 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது

புதுக்கோட்டையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 825 ஆக அதிகரிப்பு!

நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 825 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் புதுக்கோட்டையில் மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 825 ஆக உயர்ந்துள்ளது.