புதுக்கோட்டை- தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாய்! கல்லூரி மாணவியுடன் கணவன் ஓடியதால் நடந்த கொடூரம்!

 

புதுக்கோட்டை- தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாய்! கல்லூரி மாணவியுடன் கணவன் ஓடியதால் நடந்த கொடூரம்!

இரவு சாப்பாட்டில் தூக்க மாத்திரைகள் கலந்துகொடுத்ததால் பிள்ளைகள் அசந்து தூங்கினார்கள். அப்போது, முன்னரே திட்டமிட்டபடி, அந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார் தாய் ராதா. பின்னர் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட ராதா, மூவருக்கும் சேர்த்து தீ வைத்துள்ளார். இதில், தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் தீயில் எரிந்தபோது அலறியுள்ளனர். ராதாவும் தீயில் வெந்தபோது அலறியுள்ளார்.

புதுக்கோட்டை- தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாய்! கல்லூரி மாணவியுடன் கணவன் ஓடியதால் நடந்த கொடூரம்!

இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, ராதாவும், அப்ரீத்தும் அதே இடத்தில் உயிரிழ்ந்தனர். சிறுவன் அபிஷேக் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிஷேக் உயிரிழந்தான்.

இத்தனை துயரம் இங்கே நடந்திருக்கும்போது, அந்த படுபாவி சின்னப்போண்ணோடு உல்லாசம் அனுபவிக்கிறான் பாரு என்று அப்பகுதியினர் திட்டித்தீர்த்தனர்.
சம்பவம் குறித்து, வழக்குபதிவு செய்துகொண்டு, கல்லூரி மாணவியுடன் தலைமறைவான முத்துவை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள வல்லம்பக்காடு ஊரைச்சேர்ந்தவர் முத்து(45). இவரது மனைவி ராதா(34). இவர்களுக்கு அபிஷேக்(13), அபிரித்(9) என்ற இரண்டு மகன்கள். இருவரும் அதே பகுதியில் படித்து வந்தனர்.
சந்தோசமாக இருந்த குடும்பத்தில் கல்லூரி மாணவியினால் அந்த சந்தோசம் பறிபோனது. ராஜேந்திரபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் முத்துவுக்கும் பழக்கம் உண்டாகி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்கும் அளவுக்கு அது போயிருக்கிறது. இது தெரியவந்ததும், குடும்பத்தில் பிரச்சனை.

புதுக்கோட்டை- தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாய்! கல்லூரி மாணவியுடன் கணவன் ஓடியதால் நடந்த கொடூரம்!

ராதா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், முத்து அந்த கல்லூரி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அந்த மாணவியுடன் ஊரை விட்டே ஓடியிருக்கிறார் முத்து.

இது பற்றிய விபரம் தெரியவந்ததும் மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை- தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாய்! கல்லூரி மாணவியுடன் கணவன் ஓடியதால் நடந்த கொடூரம்!

கணவர் தன்னையும், பிள்ளைகளையும் விட்டு மாணவியுடன் ஓடிப்போனதால், மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் ராதா. அந்த நேரத்தில்தான் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளும் அந்த முடிவை எடுத்திருக்கிறார்.