புதுச்சேரி கடற்கரையில் கூடிய மக்களை விரட்டியடித்த போலீசார்

 

புதுச்சேரி கடற்கரையில் கூடிய மக்களை விரட்டியடித்த போலீசார்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதேபோல் விடுதிகளில் புத்தாண்டன்று 200 பேரை அனுமதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணாமாக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியது

புதுச்சேரி கடற்கரையில் கூடிய மக்களை விரட்டியடித்த போலீசார்

இந்நிலையில் புதுச்சேரி கடற்கரையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகமாக வந்த கூட்டத்தை அடுத்து அனைவரையும் போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் புத்தாண்டு கொண்டாட வந்த இளைஞர் கூட்டம் ஏமாற்றத்துடன் திரும்பியது. புத்தாண்டையொட்டி பல்வேறு இடங்களில் காவல்துறை தீவிர சோதனை நடத்திவருகின்றனர். இதற்காக கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.