‘ஆளுநரின்றி புதுச்சேரி சட்டப்பேரவை தொடக்கம்’ : சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது!

 

‘ஆளுநரின்றி புதுச்சேரி சட்டப்பேரவை தொடக்கம்’ :  சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது!

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஜூலை 30க்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்தது. அதன்படி இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் பெற முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதினார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின்னர் மத்திய அரசு இதற்கான எழுத்துப்பூர்வமான ஒப்புதலை அளித்தது. அதன்படி இன்று பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

‘ஆளுநரின்றி புதுச்சேரி சட்டப்பேரவை தொடக்கம்’ :  சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது!

இதுகுறித்து நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி எழுதிய கடிதத்தில், துணைநிலை ஆளுநர் உரை தனக்கு தாமதமாக கிடைத்தது. இதற்கான ஒப்புதலை அரசு இதுவரை என்னிடமிருந்து பெறவில்லை. யூனியன் பிரதேச சட்டப்படி ஆளுநர் ஒப்புதலை பெற வேண்டும். எனவே வேறு ஒரு தினத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி முடிவெடுத்தப்படி பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்படும் என்று அறிவித்தார்.

‘ஆளுநரின்றி புதுச்சேரி சட்டப்பேரவை தொடக்கம்’ :  சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது!

இந்நிலையில் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது. பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல்வழங்காத நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் கிரண்பேடிக்கு 15 நிமிடம் காத்திருந்த நிலையில் அவர் வராததால் கூட்டம் தொடங்கியது. இதை தொடர்ந்து மதியம் 12.05 மணிக்கு முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.