புதுச்சேரி அரசு கவிழ திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் காரணமா?

 

புதுச்சேரி அரசு கவிழ திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் காரணமா?

புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என குற்றம் சாட்ட முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும்கட்சி எம்எல்ஏக்களின் திடீர் ராஜினாமா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துள்ளது. எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி அரசு இழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி அரசு கவிழ திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் காரணமா?

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ” புதுச்சேரியில் திமுகவை வளர்ப்பதற்காக ஜெகத்ரட்சகன் பேசியதை காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என குற்றம் சாட்ட முடியாது. உட்கட்சி பிரச்சினையை பயன்படுத்தி புதுச்சேரி அரசை பாஜக அரசு கவிழ்த்துள்ளது” என்றார்.

புதுச்சேரி அரசு கவிழ திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் காரணமா?

முன்னதாக புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், அண்மையில் புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமையும். 30 தொகுதிகளும் திமுக வெற்றிபெறும். இல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில் 15 இடங்களிலும், திமுக 9 தொகுதிகளில் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுகவின் தயவால் தான் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது என்றார்.