“ஆளுநர், முதல்வரின் அதிகாரம் எனக்கு தெரியும்” – தமிழிசை சௌந்தரராஜன்

 

“ஆளுநர், முதல்வரின் அதிகாரம் எனக்கு தெரியும்” – தமிழிசை சௌந்தரராஜன்

பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதிவியேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

“ஆளுநர், முதல்வரின் அதிகாரம் எனக்கு தெரியும்” – தமிழிசை சௌந்தரராஜன்

இந்நிலையில் புதுச்சேரியின் ஆளுநராக பதவியேற்று கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “பதவிப் பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். தெலுங்கானா , புதுச்சேரி என இரட்டை குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளார்கள்” என்றார்.

“ஆளுநர், முதல்வரின் அதிகாரம் எனக்கு தெரியும்” – தமிழிசை சௌந்தரராஜன்

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர், முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன். அரசின் பெரும்பான்மை குறித்து எதிர்க்கட்சிகள் அளித்த புகார் தொடர்பாக கோப்பை பார்க்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து அனைவரையும் ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன். ஆளுநரை மக்கள் எளிதில் சந்திக்க கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்கான தாக இருக்கும்” என்றார்.