புதுச்சேரியில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்- தமிழிசை

 

புதுச்சேரியில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்- தமிழிசை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.மேலும் சில மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

புதுச்சேரியில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்- தமிழிசை

இந்நிலையில், புதுச்சேரியில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் அறிவித்துள்ளார். அனைத்து மாணவர்களும் முழு ஆண்டு தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காததால் 12 ஆம் வகுப்புகளை தவிர அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.