ஒருதலை காதல் : கொதிக்கும் எண்ணெய்யை சிறுமி மீது ஊற்றிய பயங்கரம்!

 

ஒருதலை காதல் : கொதிக்கும் எண்ணெய்யை சிறுமி மீது ஊற்றிய பயங்கரம்!

புதுச்சேரி நரம்பை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 28 ஆம் தேதி இரவு சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஜன்னல்வழியாக கொதிக்கும் எண்ணையை யாரோ ஊற்றியுள்ளனர். இதனால் சிறுமியின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். உடனே அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒருதலை காதல் : கொதிக்கும் எண்ணெய்யை சிறுமி மீது ஊற்றிய பயங்கரம்!

இதுகுறித்து சிறுமியின் தாயார் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் கொடுக்க புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் என்ற 20 வயதான இளைஞர் சிறுமி மீது எண்ணெய் ஊற்றியது தெரியவந்தது. இவர் லேப் டெக்னீசியன் படித்துவிட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

ஒருதலை காதல் : கொதிக்கும் எண்ணெய்யை சிறுமி மீது ஊற்றிய பயங்கரம்!

மாதேஷ் சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மாதேஷின் தொல்லை பொறுக்க முடியாமல் சிறுமி தனது வீட்டில் மாதேஷ் குறித்து கூற, சிறுமியின் பெற்றோர் மாதேஷை அழைத்து கண்டித்துள்ளனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாதேஷ் சிறுமியை பழிவாங்க எண்ணி அவரது வீட்டின் ஜன்னல் அருகே அடுப்பு பற்றவைத்து கடையிலிருந்து வாங்கி வந்த எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து பின் அதை சிறுமி ஜன்னலோரத்தில் படுத்துக் கொண்டிருந்த நிலையில் அவர் மீது வீசியது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள இளைஞர் மாதேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.