புதுச்சேரி -காவல் ஆய்வாளர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி மோசடி

 

புதுச்சேரி -காவல் ஆய்வாளர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி மோசடி

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் காவல் ஆய்வாளர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி தன்வந்தரி நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் இனியன். இவரது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கிய மர்மநபர்கள் சிலர், அவரது நண்பர்களுக்கு,

புதுச்சேரி -காவல் ஆய்வாளர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி மோசடி


“தான் கஷ்டத்தில் இருப்பதால், பண உதவி செய்யுமாறு தகவல் அனுப்பியுள்ளார். இதனை பார்த்த, அவரது நண்பர்கள் ஆய்வாளர் இனியனை தொடர்புகொண்ட போது போலி முகவரியில் பேஸ்புக் துவங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆய்வாளர் இனியன் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.