புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

 

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று புதுச்சேரியில் மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,467 ஆக அதிகரித்துள்ளது. 2,095 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,323 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று அமைச்சரைவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், செயலர்கள், காவல் துறை தலைவர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து, கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறினார். புதுச்சேரிக்குள் வருபவர்களும், புதுச்சேரியில் இருந்து செல்பவர்களும் கட்டாயம் இ- பாஸ் பெற வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார்.