“மோடியையும் பார்ப்பேன்; மோடியின் தாத்தாவையும் பார்ப்பேன்” : நாராயணசாமி ஆவேசம்!

 

“மோடியையும்  பார்ப்பேன்; மோடியின் தாத்தாவையும்  பார்ப்பேன்” : நாராயணசாமி ஆவேசம்!

யாரும் நாராயணசாமி ஊழல் செய்தார் என்று சொல்லிவிட முடியாது ? என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.இதையடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார்.

“மோடியையும்  பார்ப்பேன்; மோடியின் தாத்தாவையும்  பார்ப்பேன்” : நாராயணசாமி ஆவேசம்!

இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “எனக்கு சொல்லவே அசிங்கமாக உள்ளது. அதிமுக இந்த சதி வேலையில் பங்கெடுத்து உள்ளது . ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்தனர் . ஆனால் இன்னும் 10 நாட்கள் தான் இருக்கிறது . ஐந்து ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாக முடித்து இருக்கிறேன் .இதில் எனக்கு ஒரு மன நிம்மதியும் ,நிறைவும் உள்ளது .எதை பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். எதைக் குறித்தும் நான் பயப்படவும் மாட்டேன். நான் நரேந்திர மோடிக்கே சவால் விட்டிருக்கிறேன். ஊழலற்ற ஆட்சியை புதுச்சேரிக்கு அளித்திருக்கிறேன்” என்றார்

“மோடியையும்  பார்ப்பேன்; மோடியின் தாத்தாவையும்  பார்ப்பேன்” : நாராயணசாமி ஆவேசம்!

“பிரதமர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்துள்ளேன். விண்வெளி ஆராய்ச்சித் துறை அமைச்சராக இருந்துள்ளேன். அணுசக்தித் துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். மன்மோகன் சிங்குடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். 25 ஆண்டுகாலம் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். யாரும் நாராயணசாமி ஊழல் செய்தார் என்று சொல்லிவிட முடியாது ?அதை நிரூபிக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன் . மோடிக்கு தெரியும் நாராயணசாமி யாரென்று , மோடியையும் சந்திப்பேன் மோடியின் தாத்தாவையும் பார்ப்பேன் ” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.