புதுச்சேரியில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 79 ஆனது!!

 

புதுச்சேரியில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 79 ஆனது!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் லட்ச கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,91,356 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,413 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனாவில் இருந்து 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை எட்டியுள்ளது.

புதுச்சேரியில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 79 ஆனது!!

இந்நிலையில் புதுச்சேரியில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோலை நகரில் 2 வயது குழந்தை உள்ளிட்ட மூவருடன் சேர்த்து 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் அனைரும் புதுச்சேரி அரசு இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது. சிகிச்சையில் 54 பேர் உள்ள நிலையில் 25 பேர் குணமடைந்துள்ளனர்.