புதுச்சேரியில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு!

 

புதுச்சேரியில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் 87 லட்சத்து 90 ஆயிரத்து 605பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 63ஆயிரத்து 203 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 46 லட்சத்து 50 ஆயிரத்து 668 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள், ஜிப்மர் மருத்துவமனை மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனை என இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி நகரில் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரியும் 58வயது உதவி ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.