புதுச்சேரியில் 3 மாதக்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

 

புதுச்சேரியில் 3 மாதக்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

இதுவரை உலகம் முழுவதும் 86 லட்சத்து 14 ஆயிரத்து 672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 57ஆயிரத்து 025 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 45 லட்சத்து 62ஆயிரத்து 201 பேர் குணமாகியுள்ளனர்.இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் 3 மாதக்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் மூன்று மாத குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு தாயாருடன் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் இன்று புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 287 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 162 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.