புதுச்சேரியில் மேலும் 147 பேருக்கு கொரோனா; பாதிப்பு 1,743 ஆக அதிகரிப்பு!
Jul 16, 2020, 12:25 IST1594882519000
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,743 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 830க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 800க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், புதுச்சேரியில் கொரோனாவால் பாதித்த 9 மாத குழந்தை உயிரிழந்ததால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.