புதுச்சேரியில் மேலும் 109 பேருக்கு கொரோனா; 2000ஐ நெருங்கும் பாதிப்பு!

 

புதுச்சேரியில் மேலும் 109 பேருக்கு கொரோனா; 2000ஐ நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 10,38,716 லிருந்து 10,77,618 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,77,423 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,816 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 38,902 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 543 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரியில் மேலும் 109 பேருக்கு கொரோனா; 2000ஐ நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் மேலும் 109 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் 1999 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 1,154 பேர் குணமடைந்துள்ள நிலையில், 817 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.