புதுச்சேரியில் மேலும் 139பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 2654 ஆக அதிகரிப்பு!
இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 13,36,861 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,49,432 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 49,310 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 1,129 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.
இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் மேலும் 139பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் 2654 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 1561 பேர் குணமடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 1055 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் அங்கு உயிரழப்பு 38 ஆக உயர்ந்துள்ளது.