புதுச்சேரியில் 3 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!
Jul 28, 2020, 11:49 IST1595917161000
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 14,83,156 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,52,743 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 47,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 654 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,011 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 47 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,782 ஆக அதிகரித்துள்ளது.