புதுச்சேரியில் மேலும் 511 பேருக்கு கொரோனா; இதுவரை 190 பேர் மரணம்!

 

புதுச்சேரியில் மேலும் 511 பேருக்கு கொரோனா; இதுவரை 190 பேர் மரணம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, செவ்வாய் கிழமை தோறும் முழுபொதுமுடக்கத்தை அமல்படுத்தி வருகிறது. இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, புதுச்சேரிக்கு செல்ல இபாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. மேலும், தனிநபர் செல்ல தடை விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் பாதிப்பு நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் மேலும் 511 பேருக்கு கொரோனா; இதுவரை 190 பேர் மரணம்!

இந்த நிலையில் புதுச்சேரியின் தற்போதைய கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அங்கு மேலும் 511 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 12,434 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவால் 190 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,761 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் எஞ்சியுள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.