புதுச்சேரியில் மேலும் 166 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 3,171 ஆக அதிகரிப்பு!

 

புதுச்சேரியில் மேலும் 166 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 3,171 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 15, 31,669 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,88,029 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,193 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 24 மணிநேரத்தில் 48,513 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 768 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரியில் மேலும் 166 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 3,171 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. புதுச்சேரியின் பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூடிய நிலையில், எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அவசர அவசரமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்த நிலையில் புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு மேலும் 166 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,171 ஆக அதிகரித்துள்ளது.