புதுச்சேரியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

 

புதுச்சேரியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், சட்டபேரவை அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கும் வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சரான கமலக்கண்ணனுக்கும் கொரோனா உறுதியானது. இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வந்ததால் புதுச்சேரி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த ஏனாம் பகுதியில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

புதுச்சேரியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அங்கு மேலும் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பாதிப்பு 6,995 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் 106 பேர் இதுவரை உயிரிழந்துள்ள தற்போது 2,880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.